Thursday 13 October 2011

எனக்குப் பிடித்த பொன்மொழிகள் ;

''பாடத் தெரிந்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை ;பாட வேண்டும் போல் தோன்றினாலே அன்றைய தினம் உங்களுக்கு வெற்றிகரமான நாளாக 
அமையும் .''

''தங்கத்தில் அங்கி வேண்டும்மென்று விரும்புங்கள் .தங்கத்தில் கைக்குட்டையாவது கிடைக்கும் ''

'''உலகத்தை குறுகலாக பார்த்தால்,அது குறுகலாக தெரியும் .மட்டமாகப் பார்த்தால் மட்டமாகத் தெரியும் .சுயநலத்தோடு பார்த்தால்,சுயநலமாகத் தெரியும் .பரந்த ,தாராளமான ,சினேகிதமான மனத்தோடு பாருங்கள் .அற்புதமான மனிதர்கள் உங்கள் கண்ணில் படுவார்கள் ''

''நீங்கள் சிலரை எல்லா நேரத்திலும் ஏமாற்றலாம் :எல்லாரையும் சில நேரத்தில் ஏமாற்றலாம் ; ஆனால் ,எல்லாரையும் ,எல்லா நேரத்திலும் ஏமாற்ற முடியாது ''.




No comments:

Post a Comment